Friday, December 29, 2023

தனிநபர் உருமாற்றத்தில் கவனம் செலுத்து: ஒரு லெந்து காலப் பயணம்

 யாத்திரை 23 | வியாழன் | மார்ச் 7

ரோமர் 12:2

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

  

ரோமர் 12:2-ல், புதுப்பித்தலின் உருமாற்ற வல்லமையைப் பற்றி நமக்கு நினைவூட்டப்படுகிறது: நாம் இந்த உலகத்தின் துன்மார்க்கமான போக்குக்கு இணங்குவதை விட்டுவிட்டு நமது மனதைப் புதுப்பிப்பதன் மூலம் மாற்றப்பட பவுல் அறைகூவல் விடுகிறார். இந்த லெந்து காலத்தில், தனிப்பட்ட மனமாற்றம், தன்னை அறிதலின் பயணம் மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த நாம் அழைக்கப்படுகிறோம்.

லெந்து காலம் என்பது சுய பரிசோதனை, மனந்திரும்புதல், ஆவிக்குரிய புதுப்பித்தல் ஆகியவற்றின் காலமாகும். இது நம் வாழ்க்கையை ஆராயவும், மாற்றத்திற்கான நமது தேவையை அங்கீகரிக்கவும், நமக்குள் இருக்கும் கர்த்தரின் கிருபையின் உருமாற்றப் பணிகளைத் தழுவவும் நம்மை அழைக்கிறது.

தனிப்பட்ட மாற்றத்தில் கவனம் செலுத்துவது சுய பரிசோதனை மற்றும் பழைய பழக்கவழக்கங்கள், அணுகுமுறைகள் மற்றும் பரிசோதனை முறைகளைக் கைவிட்டு, நம் மனதைப் புதுப்பிப்பதற்கான நனவான முடிவை உள்ளடக்கியது. இது மேலும் கிறிஸ்துவைப் போல மாறுவதற்கான ஓர் அர்ப்பணிப்பு ஆகும். இது கர்த்தரின் அன்பு மற்றும் வழிகாட்டுதலால் நம் வாழ்க்கையை வடிவமைக்க அனுமதிக்கிறது.

லெந்து காலத்தின் போது சுய பரிசோதனை நமக்கு வழிகாட்டும் ஒளியாக மாறும். மனமாற்றம் தேவைப்படும் நம் வாழ்க்கையின் பகுதிகளை நாம் சிந்திக்கிறோம், மாற்றங்களைச் செய்வதில் கர்த்தரின் வழிகாட்டுதலைக் கேட்கிறோம், மேலும் நமது எண்ணங்களையும் செயல்களையும் அவரது சித்தத்துடன் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம்.

 

ஜெபம்: பரலோகப் பிதாவே, இந்தப் பரிசுத்த லெந்து காலத்தில், எங்கள் சொந்த வாழ்க்கையின் மாற்றத்தில் நாங்கள் கவனம் செலுத்தும்போது உமது கிருபையையும் வழிகாட்டலையும் நாடுகிறோம். எங்கள் மனதைப் புதுப்பிக்க உதவும். உலகத்தாரோடு இணக்கமாக இருப்பதை விட்டு விலகி, உமது பரிபூரண சித்தத்துக்குள் எங்களை இணைத்துக் கொள்ளும். எங்கள் சுய பரிசோதனை உம்மோடு ஐக்கியப்பட்ட நடைப்பயணத்திற்கும் எங்கள் வாழ்க்கையில் மாற்றத்திற்கும் வழிவகுக்கட்டும். இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

 

சுய பரிசோதனை: உங்கள் வாழ்க்கையில் மனமாற்றம் மற்றும் புதுப்பித்தல் தேவைப்படும் பகுதிகள் உள்ளனவா? இந்த லெந்து காலத்தில் உங்கள் எண்ணங்கள், அணுகுமுறைகள் மற்றும் செயல்களைக் கர்த்தருடைய சித்தத்துடன் எவ்வாறு ஒருங்கிணைக்கலாம்? தனிப்பட்ட மாற்றத்தில் கவனம் செலுத்துவதற்கும் ஆவியின் அச்சாரத்தில் வளருவதற்கும் நீங்கள் என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்?

No comments:

Post a Comment