யாத்திரை 30 | வியாழன் | மார்ச் 14
யாக்கோபு 4:8
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
யாக்கோபு 4:8-ல் ஓர் அழைப்பையும்
வாக்குத்தத்தத்தையும் காண்கிறோம்: கர்த்தரிடம் நெருங்கினால், அவர் நம்மை
நெருங்குவார். திருக்கு மனம் படைத்த பாவிகளாகிய நாம், நமது கைகளைச்
சுத்தப்படுத்தி, இருதயங்களைத் தூய்மைப்படுத்த ஏவப்படுகிறோம். இந்த லெந்து
காலத்தில், மனந்திரும்புவதன் மூலம் கர்த்தரை நெருங்குவதற்கும், அவரது அன்பு
மற்றும் கிருபையின் தெய்வீக அரவணைப்பை அனுபவிக்கவும் அழைக்கப்படுகிறோம்.
லெந்து காலம் என்பது சுய பரிசோதனை, மனந்திரும்புதல், ஆவிக்குரிய
புதுப்பித்தல் ஆகியவற்றின் காலமாகும். கர்த்தரை மனமுவந்து அணுகவும், பாவத்திலிருந்து
நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவும், நேர்மையுடன் அவருடைய
பிரசன்னத்தைத் தேடவும் அது நம்மை அழைக்கிறது.
மனந்திரும்புதல் மூலம் கர்த்தரை நெருங்குவது
சுய பரிசோதனை மற்றும் பாவ அசுத்தத்திலிருந்து விலகிச் செல்வதற்கான சரியானத்
தேர்வை உள்ளடக்கியது. அவருடைய மன்னிப்பிற்கான நமது தேவையை ஒப்புக்கொள்வதற்கும், அவரது உருமாற்றிய அன்பைப்
பெறுவதற்கும் இது ஒரு வாய்ப்பாகும்.
லெந்து காலத்தின் போது சுய பரிசோதனை
நமக்கு வழிகாட்டும் ஒளியாக மாறும். நம் இருதயங்களின் நிலை, சுத்திகரிப்பு
செய்ய வேண்டிய பாவங்கள் மற்றும் நாம் இரட்டை மனப்பான்மை கொண்ட நம் வாழ்க்கையின் பகுதிகளைப்
பற்றி சிந்திக்கிறோம். கர்த்தரை விசுவாசித்து நெருங்குவது எப்படி என்று நேர்மையுடனும்
உண்மையுடனும் நம்மை நாமே கேட்டுக் கொள்கிறோம்.
ஜெபம்: பரலோகப் பிதாவே, இந்தப் பரிசுத்த
லெந்து காலத்தில், மனந்திரும்புவதன் மூலம் உம்மை நெருங்குவதற்கான அழைப்பிற்கு
நாங்கள் செவிசாய்க்கிறோம். கர்த்தாவே, எங்கள் கைகளைச் சுத்தப்படுத்தி, எங்கள் இருதயங்களைத்
தூய்மைப்படுத்தி, எங்களை மாற்றும். நாங்கள் உம்மை நெருங்கும்போது, நீர் எங்களை
நெருங்குவீர் என்பதை அறிந்து, நேர்மையாக உம்மை அணுக எங்கள் சுய பரிசோதனை எங்களுக்கு வழிகாட்டட்டும்.
இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.
சுய பரிசோதனை: இந்த லெந்து காலத்தில்
மனந்திரும்புவதன் மூலம் நீங்கள் எவ்வாறு கர்த்தரை நெருங்கலாம்? உங்கள் வாழ்க்கையில்
என்னென்ன பாவங்கள் அல்லது அசுத்தங்கள் அகற்றப்பட வேண்டும்? எந்தெந்த
வழிகளில் நீங்கள் இரட்டை மனப்பான்மையுடன் இருந்தீர்கள்? கர்த்தரை
நேர்மையுடனும் உண்மையுடனும் எப்படி விசுவாசிக்கலாம்?
No comments:
Post a Comment