யாத்திரை 41 | திங்கள் | மார்ச் 25
லூக்கா 15:7
அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 15:7-ல் நமக்கு
தெய்வீகக் கொண்டாட்டத்தைக் குறித்த ஒரு பார்வை கொடுக்கப்படுகிறது: மனந்திரும்ப
வேண்டிய அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைவிட மனந்திரும்புகிற ஒரேயொரு பாவியின்மேல்
பரலோகத்தில் அதிக சந்தோஷம் இருக்கும். நாம் லெந்து கால பயணத்தில் ஈடுபடும்போது, மனந்திரும்பிய
இருதயத்தோடு கர்த்தரிடம் திரும்பும் பாவிகள் நிமித்தம் பரலோகத்தை நிரப்பும் ஆழ்ந்த
மகிழ்ச்சியைப் பற்றிச் சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
லெந்து காலம் என்பது சுய பரிசோதனை, மனந்திரும்புதல், ஆவிக்குரிய
புதுப்பித்தல் ஆகியவற்றின் காலமாகும். மனந்திரும்புதலின் உருமாற்றச் செயலுக்குப் பரலோகத்தில் உண்டாகும்
மகிழ்ச்சியைக் கருத்தில் கொள்ள இது நம்மை அழைக்கிறது.
“மனந்திரும்புதலினால்
பரலோகத்தில் உண்டாகும் மகிழ்ச்சி” என்பது சுய பரிசோதனை மற்றும் பாவத்திலிருந்து விலகி
கர்த்தரின் அரவணைப்புக்குத் திரும்புவதற்கான சரியான / மனமார்ந்த
தேர்வை உள்ளடக்கியது. அவருடைய சித்தத்தோடு நம் இருதயங்களை ஒருங்கிணைக்கும்போது
பரலோகத்தின் சந்தோஷத்தை அனுபவிக்க இது ஒரு வாய்ப்பாகும்.
லெந்து காலத்தின் போது சுய பரிசோதனை
நமக்கு வழிகாட்டும் ஒளியாக மாறும். மனந்திரும்புதல் தேவைப்படும் பகுதிகளைப் பற்றிச்
சிந்தித்து, கர்த்தரை நோக்கித் திரும்பும் நமது பயணம் நமக்கு மட்டுமல்லாமல், பரலோகத்திலும்
எவ்வாறு மகிழ்ச்சியைத் தரும் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்கிறோம்.
ஜெபம்: பரலோகப் பிதாவே, இந்தப் பரிசுத்தமான
லெந்து காலத்தில் நாங்கள் பயணிக்கும்போது, மனந்திரும்பிய
எங்கள் இருதயங்களால் பரலோகத்திற்கு மகிழ்ச்சி வரட்டும். எங்களுடைய சுய பரிசோதனையில்
எங்களுக்கு வழிகாட்டி, எங்கள் பாவத்திலிருந்து விலகச் செய்து, உமது சித்தத்துடன்
எங்கள் வாழ்க்கையை ஒருங்கிணைப்பதன் மூலம் வரும் எல்லையற்ற மகிழ்ச்சியை அனுபவிக்க கிருபை
தாரும். இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.
சுய பரிசோதனை: இந்த லெந்து காலத்தில்
உங்கள் வாழ்க்கையின் எந்தெந்த பகுதிகளில் மனந்திரும்புதல் தேவைப்படுகிறது? கர்த்தரிடம்
நீங்கள் திரும்புவது பரலோகத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டு வந்து, அவருடைய
தெய்வீக அன்புடனான உங்கள் தொடர்பை எவ்வாறு ஆழப்படுத்த முடியும்?
No comments:
Post a Comment