யாத்திரை 26 | திங்கள் | மார்ச் 10
எபேசியர் 2:8-9
கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால்
உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும்
பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;
எபேசியர் 2:8-9, ஓர் ஆழ்ந்த உண்மையை வெளிப்படுத்துகிறது: கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டோம். இது நமது சொந்தச் செயலின் பலனல்ல; இது கர்த்தரின் ஈவேயன்றி, எவரும் பெருமைப்பட்டுக் கொள்ளாதபடியான கிரியைகளின் விளைவல்ல. இந்த லெந்து காலத்தில், கிருபையின் வரம், விசுவாசத்தின் பங்கு மற்றும் கர்த்தரால் நமக்கு வழங்கப்பட்ட இரட்சிப்பைப் பற்றி நாம் சிந்திக்கிறோம்.
இக்காலமானது நமது வாழ்க்கையைப் பரிசோதித்துப்
பார்க்கவும், நாம் மாற வேண்டிய கட்டாயத்தை ஒத்துக் கொள்ளவும், முழுமனதுடன் தேவனிடம்
திரும்பவும் நம்மை அழைக்கிறது.
கிருபை, விசுவாசம்
மற்றும் இரட்சிப்பு ஆகியவை இந்தத் தெய்வீக சமன்பாட்டில் பின்னிப் பிணைந்துள்ளன. கர்த்தரின்
மாறாத கிருபை, இரட்சிப்பிற்கான வாய்ப்பை வழங்குகிறது. விசுவாசம் என்பது
நம் பிரதியுத்திரமாகும். அந்த வரத்தை ஏற்றுக்கொண்டு, கர்த்தர்
மீதான விசுவாசத்தைக் காத்துக் கொள்வோமாக. இரட்சிப்பு என்பது விசுவாசத்தினால் உண்டான
விளைவு. அது விசுவாசிக்கிற நமக்குக் கிடைக்கும் இலவச ஈவு.
லெந்து காலத்தின் போது சுய பரிசோதனை
நமக்கு வழிகாட்டும் ஒளியாக மாறும். கர்த்தருடைய கிருபையின் ஆழத்தையும், நம்முடைய
விசுவாசம் இரட்சிப்பின் ஒரு கருவியாக எவ்வாறு இருந்திருக்கிறது என்பதையும் நாம் சிந்திக்கிறோம்.
இந்த வரத்தினை நாம் எவ்வாறு ஏற்றுக்கொண்டு, கர்த்தரின்
கிருபைக்கு சான்றாக நாம் எவ்வாறு வாழலாம் என்றும் நம்மை நாமே கேட்டுக் கொள்கிறோம்.
ஜெபம்: பரலோகப் பிதாவே, இந்தப் பரிசுத்த
லெந்து காலத்தில், உமது கிருபை, விசுவாசம் மற்றும் இரட்சிப்பின் வரத்திற்காக நாங்கள் உமக்கு
நன்றி செலுத்துகிறோம். உமது கிருபை, விசுவாசத்தின் மூலம்
எங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து மாற்றியமைக்கட்டும், இந்த விலையேறப்பெற்ற
ஈவை நாங்கள் ஒருபோதும் அற்பமாகக் கருதாதபடி எங்களைக் காத்துக் கொள்ளும். உமது எல்லையற்ற
அன்பிற்குத் மனத் தாழ்மையான நன்றியுடன் வாழ எங்கள் சுய பரிசோதனை எங்களுக்கு வழிகாட்டட்டும்.
இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.
சுய பரிசோதனை: கர்த்தரின் கிருபையும்
அவர் மீதான விசுவாசமும் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு வடிவமைத்துள்ளன? இந்த லெந்து
காலத்தில் இந்த ஈவுக்கு எந்த வழிகளில் பதிலளித்து, நன்றியுடன்
நீங்கள் வாழலாம்?
No comments:
Post a Comment