யாத்திரை 43 | புதன் | மார்ச் 27
அப்போஸ்தலர் 2:38
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
அப்போஸ்தலர் 2:38,
ஒரு வல்லமை வாய்ந்த செய்தியை விவரிக்கிறது: நாம் ஒவ்வொருவரும் மனந்திரும்பி
நமது பாவங்களின் மன்னிப்பிற்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் ஞானஸ்நானம் பெற வேண்டும்.
அப்போதுதான் நாம் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவோம். நாம் பரிசுத்த லெந்து காலத்தைத்
தொடங்கும்போது, மனந்திரும்புதல் மற்றும் மன்னிப்பின் ஞானஸ்நானத்தின் ஆழமான
முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
லெந்து காலம் என்பது சுய பரிசோதனை, மனந்திரும்புதல், ஆவிக்குரிய
புதுப்பித்தல் ஆகியவற்றின் காலமாகும். மனந்திரும்புதல் என்னும் உருமாற்றச் செயலையும், ஞானஸ்நானத்தின்
சாக்கிரமெந்தையும், நம்முடைய பாவமன்னிப்பை அனுபவிப்பதற்கான ஒரு வழிமுறையாகக்
கருதுவதற்கு அது நம்மை அழைக்கிறது.
“மனந்திரும்புதல்
மற்றும் மன்னிப்பின் ஞானஸ்நானம்” சுய பரிசோதனை மற்றும் பாவத்திலிருந்து விலகி, இயேசு கிறிஸ்துவில்
விசுவாசத்தை வெளிப்படுத்தவும், ஞானஸ்நானத்தின் சுத்திகரிப்பின் நீரைத் தழுவுவதற்குமான உளமார்ந்த
தேர்வை உள்ளடக்கியது. பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக
இது இருக்கிறது. இது நமது ஆவிக்குரிய பயணத்தில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது.
லெந்து காலத்தின் போது சுய பரிசோதனை
நமக்கு வழிகாட்டும் ஒளியாக மாறும். மனந்திரும்புதல் தேவைப்படும் பகுதிகளை நாம் நம்
வாழ்க்கையில் சிந்தித்து, ஞானஸ்நானம் எனும் சாக்கிரமெந்தைக் கிறிஸ்துவுக்கான நமது அர்ப்பணிப்பின்
உறுதியான வெளிப்பாடாக எவ்வாறு இருக்க முடியும் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்கிறோம்.
ஜெபம்: பரலோகப் பிதாவே, இந்தப் பரிசுத்த
லெந்து காலத்தில் நாங்கள் நுழையும்போது, ஞானஸ்நானத்தின் மூலம்
மனந்திரும்புதலையும் மன்னிப்பின் ஆழமான செய்தியையும் பரிசோதிக்கிறோம். பாவத்தை விட்டு
விலகி, இந்தச் சாக்கிரமெந்தின் உருமாற்றும் வல்லமையைத் தழுவச் செய்யும்
வல்லமையை எங்களுக்குத் தந்தருளும். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான ஒரு புதிய
அர்ப்பணிப்புக்கு எங்கள் சுய பரிசோதனை வழிநடத்தட்டும். இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலே
ஜெபிக்கிறோம். ஆமென்.
சுய பரிசோதனை: இந்த லெந்து காலத்தில்
உங்கள் வாழ்க்கையின் எந்தெந்த பகுதிகளில் மனந்திரும்புதல் தேவைப்படுகிறது? ஞானஸ்நானத்தின்
சாக்கிரமெந்து எவ்வாறு பாவத்திலிருந்து விலகி, இயேசு கிறிஸ்துவின்
மூலம் வழங்கப்பட்ட மன்னிப்பை ஏற்றுக்கொள்வதற்கான உங்கள் உறுதிப்பாட்டின் உறுதியான வெளிப்பாடாக
இருக்க முடியும்?
No comments:
Post a Comment