8. நியாயத்தீர்ப்பின் நிமித்தம் மனத்தாழ்மை

வேத வாசிப்பு: 1 சாமுவேல் 3:18

 

தியானம்:

இஸ்ரவேலில் ஆசாரியனாகவும் நியாயாதிபதியாகவும் இருக்கும் ஏலி, இளைஞனாகிய சாமுவேல் மூலம் தேவனிடமிருந்து வரும் ஒரு பயங்கரமான தீர்க்கதரிசனத்தை எதிர் கொள்கிறான். ஏலியின் மகன்களான ஓப்னியும் பினெகாசும் செய்த கொடிய பாவங்களின் காரணமாக ஏலியின் வீட்டாருக்கு வரவிருக்கும் நியாயத்தீர்ப்பை தேவன் வெளிப்படுத்துகிறார். தன் பிள்ளைகளின் தவறான நடத்தையைப் பற்றி ஏலி அறிந்திருந்தும், அவர்களைத் திறம்பட கண்டிக்கத் தவறி விட்டான். அதனால் மோசமான விளைவுகளைக் கர்த்தர் ஏற்படுத்தினார். கர்த்தருடைய செய்தியை சாமுவேல் தெரிவிக்கையில், ஏலி மனத் தாழ்மையுடன் தெய்வீக நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறான். தன்னுடைய சொந்த தவறுகளை ஒப்புக்கொண்டு, கர்த்தருடைய சித்தத்திற்கு அடிபணிகிறான்.

 

ஏலியின் கதை இஸ்ரவேலில் ஆவிக்குரிய ரீதியில் சவாலான காலகட்டத்தில் வெளிப் படுகிறது. அவனுடைய மகன்களான ஓப்னியும் பினெகாசும் தங்களுடைய ஆசாரிய ஸ்தானத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்கள். கர்த்தருடைய சட்டங்களை அப்பட்டமாக அவமதித்தார்கள். அவர்களுடைய பாவங்களுக்கு எதிராக ஏலி தீர்க்கமான நடவடிக்கை எடுக்காதது, புறக்கணிக்கப்பட்ட தலைமைப் பொறுப்புகளின் விளைவுகளை எடுத்துக் காட்டுகிறது. ஏலியின் குடும்பத்தின் மீது கர்த்தரின் நியாயத்தீர்ப்பு, தேவனை கனம் பண்ணுவதன் முக்கியத்துவத்தையும் ஆவிக்குரிய தலைமையில் உத்தமத்தைக் காத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தையும் முதன்மை படுத்திக் காட்டுகிறது. தீர்க்கதரிசனத்திற்கு ஏலியின் பதில்—எதிர்ப்பின்றி அதை ஏற்றுக்கொள்வது—மனத்தாழ்மையையும் மனந்திரும்புதலையும் நிரூபிக்கிறது.

 

ஏலி தனது குறைபாடுகளை ஒப்புக் கொள்வதும் கர்த்தரின் நியாயத்தீர்ப்பை ஏற்றுக் கொள்வதும் தலைமைத்துவ பொறுப்புக் கூறலுக்கு ஒரு வல்லமையான பாடமாக செயல்படுகின்றன. அன்புடனும் ஞானத்துடனும் சிட்சிப்பதன் முக்கியத்துவத்தை இக்கதை நமக்கு நினைவூட்டுகிறது. இது கண்டனம் செய்வதை விட மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தலைவர் களாக, பெற்றோராக, அல்லது வழி காட்டிகளாக, நாம் கர்த்தருடைய தராதரங்களை நிலைநிறுத்தி, மற்றவர்களை நீதியில் வழிநடத்த வேண்டும். ஏலியின் கதை கர்த்தரின் திருத்தத்திற்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்கவும், மனத்தாழ்மை மற்றும் மனந்திரும்புதலின் ஆவியை நாடவும் நமக்குக் கற்றுத் தருகிறது.

 

பயன்பாடு:

  1. ஏலியின் வாழ்க்கையின் உதாரணத்தைப் போல, நம் சொந்த குறைபாடுகளை ஒப்புக்கொண்டு, கர்த்தரின் சிட்சிப்பையும் திருத்தத்தையும் மனுந்திரும்பிய மனதுடன் ஏற்றுக்கொள்வோம்.
  2. ஏலி மீது வந்த தீர்ப்பின் மூலம், நாம் மற்றவர்களை நீதியின் பாதையில் வழிநடத்த, தலைமைத்துவத்தில் நேர்மையை நிலைநிறுத்தவும் முக்கியத்துவம் உள்ளதை புரிந்துகொள்வோம்.
  3. மற்றவர்களை சிட்சிப்பதில் கர்த்தரின் அன்பையும் ஞானத்தையும் வெளிப் படுத்துவோம். சிட்சிப்பது கண்டனம் அல்ல, மறுசீரமைப்பு மற்றும் மீட்டெடுப்பை நோக்கமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.

ஜெபம்:
  1. தலைமைத்துவத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கர்த்தரின் தரங்களை நிலை நிறுத்துவதற்கான ஞானத்தையும் தைரியத்தையும் வேண்டி ஜெபி.
  2. தேவனுடைய சிட்சிப்பையும் வழி நடத்துதலையும் உடனடியாக ஏற்றுக் கொள்ளும் தாழ்மையான இருதயத்தைக் கேள்.
  3. அன்புடன் சிட்சிக்கவும், மற்றவர்களை நீதியில் மீட்டெடுக்கவும் ஜெபி.

 

சுய பரிசோதனை:

  1. ஆவிக்குரிய விஷயங்களில் மற்றவர்களுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டிய சூழ்நிலைகளை நான் எப்படிக் கையாள்வது?
  2. எனது சொந்த குறைபாடுகளை ஒப்புக்கொண்டு, தாழ்மையுடன் கர்த்தரின் சிட்சிப்பை நான் ஏற்றுக்கொள்கிறேனா?
  3. அன்போடும் புதுப்பிக்கும் நோக்கத்தோடும் மற்றவர்களைச் சிட்சிக்க நான் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?
  4. மற்றவர்களை நீதியில் வழிநடத்துவதில் ஒரு தலைவர் அல்லது வழிகாட்டியாக எனது பொறுப்புகளை நான் எவ்வாறு சிறப்பாக நிறைவேற்ற முடியும்?

Comments