17. யோனா: கர்த்தரின் அழைப்பையும் இரக்கத்தையும் தழுவுதல்

வேத வாசிப்பு: யோனா 3:110

 

தியானம்:

யோனாவின் பயணம் தம்முடைய ஜனங்களை மனந்திரும்புதலுக்கு அழைப்பதில் தேவனின் விடா முயற்சிக்கும், அவரிடம் மனந் திரும்புகிறவர்களுக்கு அவர் வெளிப்படுத்தும் அளவற்ற இரக்கத்திற்கும் ஒரு சான்றாகும். ஆரம்பத்தில் பொல்லாத நினிவேக்கு நியாயத்தீர்ப்பின் செய்தியை அறிவிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த யோனா, பயத்தாலும் தயக்கத்தாலும் கர்த்தருடைய கட்டளையிலிருந்து தப்பி ஓடுகிறான். அவனுடைய கீழ்ப்படியாமை அவனைக் கொந்தளிக்கும் கடலுக்குள் இட்டுச் செல்கிறது. அங்கே அவன் ஒரு பெரிய மீனால் விழுங்கப்படுவதன் மூலம் கர்த்தருடைய சிட்சிப்பை அனுபவிக்கிறான்.

 

மீனின் வயிற்றில், யோனா மனந் திரும்புதலுடன் தேவனை நோக்கிக் கூப்பிடுகிறான். அவனுடைய கீழ்ப்படியாமையை ஒப்புக் கொண்டு தனக்கு உண்டான கட்டளைகளை நிறைவேற்றுவதாக வாக்குக் கொடுக்கிறான். தேவன் தம்முடைய இரக்கத்தால், யோனாவை உலர்ந்த தரையில் உமிழும்படி அந்த மீனுக்குக் கட்டளையிடுகிறார். நினிவேக்குச் சென்று ஊழியத்தை நிறைவேற்ற அவனுக்கு இரண்டாவது வாய்ப்பை அளிக்கிறார். இந்தச் சமயம், யோனா கீழ்ப்படிந்து கர்த்தருடைய செய்தியை உண்மையுடன் அறிவிக்கிறான். வரவிருக்கும் நியாயத் தீர்ப்பையும் பின்னர் அவன் அறிவிக்கிறான்.

 

யோனா ஆச்சரியப்படும் விதத்தில், நினிவே ஜனங்கள் அரசனிடமிருந்து மனத் தாழ்மையோடும் மனந் திரும்புதலோடும், மிருகங்கள் உட்பட அனைவரும் தங்கள் பாவங்களைக் குறித்த மனஸ்தாபத்தை வெளிப்படுத்துகின்றனர். தேவன், அவர்களுடைய உண்மையான மனந் திரும்புதலைக் கண்டு, அவர் திட்டமிட்ட நியாயத்தீர்ப்பைக் கைவிட்டு, நினிவே ஜனங்களுக்கு இரக்கம் காட்டுகிறார்.

 

யோனாவின் கதை தேவனின் அடைய முடியாத இரக்கத்தையும், மனந்திரும்புதலின் சக்தியையும் வெளிப்படுத்துகிறது. கர்த்தரின் சிட்சிப்புக்கும் பிறகு மனிதர்கள் எப்படி மாற்றம் அடைய முடியும் என்பதற்கான ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாக இது அமைகிறது.

 

 

பயன்பாடு:

  1. யோனாவைப் போல, தேவனின் அழைப்புகளுக்கும் கட்டளைகளுக்கும் பயமின்றி கீழ்ப்படிந்து செயல்படு. தேவனின் பணியினை நடத்த ஒப்புக்கொண்டால், உறுதியுடன் அதை செயல் படுத்து.
  2. யோனாவின் குற்றத்தினால் அவன் உண்மையான மனந்திரும்புதலை வெளிப்படுத்தியதைப் போல, நாமும் மனத்தாழ்மையுடன் தேவனிடமிருந்து மன்னிப்பு கேட்டு, புதுவாழ்வு பெற வேண்டும்.
  3. கர்த்தர் உனக்கு எந்த ஒரு கடமையையோ, திட்டத்தையோ கொடுத்தால் அதனை நிரந்தரமான கட்டாயமாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்று. தேவனின் திட்டங்கள் உன் வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதை ஆழமாக சிந்தி.

 

ஜெபம்:

  1. பயத்தினாலோ தயக்கத்தினாலோ பரலோக பிதாவின் கட்டளைகளை மீறிய சமயங்களுக்காக மன்னிப்பு கேள்.
  2. ஆண்டவரின் இரக்கத்திலும் இறையாண்மையிலும் விசுவாசம் வைத்து, அவரின் அழைப்புக்குச் செவி கொடுக்க கீழ்ப்படிதலும் விருப்பமும் கொண்ட இருதயத்தைக் கேட்டு ஜெபி.
  3. மனந்திரும்புதல் மற்றும் இரட்சிப்பின் செய்தியைக் கேட்டு பதிலளிக்க வேண்டியவர்களுக்காக ஊக்கமாக ஜெபிக்க பரிசுத்த ஆவியானவர் கற்றுக் கொடுக்கும் படி ஜெபி.

 

சுய பரிசோதனை:

  1. பயம் அல்லது அசௌகரியம் காரணமாக நான் எப்போதாவது தேவனுடைய அழைப்பை அல்லது கட்டளையை எதிர்த்திருக்கிறேனா? தேவனோடும் மற்றவர்களோடும் எனக்கிருந்த பந்தத்தை அது எப்படிப் பாதித்தது?
  2. கர்த்தருடைய வார்த்தைக்குப் பதிலளிக்கும் விதமாக நினிவே மக்களைப் போல மனந்திரும்புதலும் மனத்தாழ்மையும் நிறைந்த இருதயத்தை நான் எவ்வாறு வளர்த்துக்கொள்ள முடியும்?
  3. தேவனுடைய திட்டங்கள் சவாலானதாகவோ அல்லது எதிர்பாராததாகவோ தோன்றினால், தேவனுடைய இரக்கத்திலும் இறையாண்மையிலும் நான் எந்த வழிகளில் விசுவாசம் வைக்க முடியும்?

Comments