44. விக்கிரகாராதனை முதல் விடுதலை வரை: கிதியோனின் கீழ் இஸ்ரவேலர்களின் மனந்திரும்புதல்

வேத வசனம்: நியாயாதிபதிகள் 6:16

 

தியானம்:

கிதியோனின் காலத்தில், இஸ்ரவேலர் கர்த்தருடைய கட்டளைகளை விட்டு விலகி, விக்கிரகாராதனையில் விழுந்தனர். இந்தக் கீழ்ப்படியாமை அவர்களை ஏழு ஆண்டுகள் மீதியானியரின் கீழ் ஒடுக்குமுறைக்கு வழி நடத்தியது. வேதனையில் இருந்த இஸ்ரவேலர், தங்கள் பாவ வழிகளை ஒப்புக் கொண்டு, கீழ்ப்படியாமையின் விளைவுகளை உணர்ந்து, தேவனை நோக்கிக் கூப்பிட்டனர். அவர்களுடைய மனந் திரும்புதல் தேவனிடம் திரும்பி அவருடைய தலையீட்டை நாடுவதற்கான உண்மையான விருப்பத்தால் குறிக்கப்பட்டது.

 

நியாயாதிபதிகள் 6ல் உள்ள இஸ்ரவேலர்களின் கதை மனந்திரும்புதல், விடுதலை மற்றும் மறு சீரமைப்பு ஆகியவற்றின் வல்லமையான சுழற்சியை விளக்குகிறது. அவர்களுடைய கீழ்ப்படியாமையும் விக்கிரகாராதனையும் இருந்த போதிலும், அவர்களுடைய உள்ளப் பூர்வமான மனந்திரும்புதல், கிதியோனை ஒரு விடுதலையாளராக எழுப்பும்படி தேவனை உந்துவித்தது. இந்த விவரிப்பு தேவனுடனான நமது உறவை மீட்டெடுப்பதில் மனந் திரும்புதலின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது. உதவிக்காக இஸ்ரவேலரின் கூக்குரலுக்கு தேவன் பதிலளித்ததைப் போலவே, அவர் இன்றும் உண்மையான மனந் திரும்புதலுக்கு இரக்கம், மன்னிப்பு மற்றும் மறு சீரமைப்புடன் தொடர்ந்து பதிலளிக்கிறார். பாவத்திலிருந்து விலகி, மனந் திரும்புத லோடும் விசுவாசத்தோடும் தேவனிடம் மனந் திரும்புவதை அவர்களுடைய முன் மாதிரியிலிருந்து கற்றுக் கொள்வோமாக.

 

பயன்பாடு:

  1. விக்கிரகாராதனை மற்றும் கீழ்ப்படியாமை என்னும் பாவங்களில் இருந்து நீ விலகி, மனந் திரும்புவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, கர்த்தரிடம் உண்மையான மனந் திரும்புதலைக் கொண்டு வர வேண்டும்.
  2. தேவனின் தலையீட்டையும், அவர் தரும் ஆதரவையும் நாடி, நம் வாழ்க்கையில் உள்ள விக்கிரகங்கள் மற்றும் கவனச் சிதறல்களை அடையாளம் காட்டுவதன் மூலம் உண்மையான வழி காட்டுதலையும் சாந்தியையும் பெற வேண்டும்.
  3. உன் சொந்த பாவங்களிலிருந்து மற்றும் பிறரின் பாவங்களில் இருந்து உடனடியாக விடுதலை பெறுவது மற்றும் மனந்திரும்புதல் மூலம் உறுதியான விசுவாசத்தையும் மன்னிப்பையும் பெற வேண்டும்.
  4. கிதியோனின் உதாரணத்தைப் பின்பற்றி, கடினமான சூழ்நிலைகளில் கூட, தேவனுடைய திட்டத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளுதல், அதன் மூலம் மனந் திரும்புதலும் கர்த்தரின் மன்னிப்பும் கிடைக்கும்.

 

ஜெபம்:

  1. விக்கிரகாராதனை அல்லது கீழ்ப் படியாமையின் எந்தவொரு பகுதிகளை யும் நீ ஒப்புக் கொள்ளும்படி, உன் சொந்த வாழ்க்கையில் மனந்திரும்புதலின் ஆவிக்காக ஜெபி.
  2. அவருடனான உன் உறவுக்கு இடையூறாக இருக்கும் விக்கிரகங்கள் அல்லது கவனச் சிதறல்களை அடையாளம் காட்டும்படி கர்த்தரிடம் கேள்.
  3. தங்கள் சொந்த அல்லது மற்றவர்களின் பாவங்களால் தற்போது ஒடுக்கப்பட்டவர்கள் அல்லது துன்பப் படுபவர்களுக்காக ஜெபி. அவர்கள் விடுதலை மற்றும் மறுசீரமைப்புக்காக கர்த்தரைக் கூப்பிடு.
  4. பாவம் மற்றும் கீழ்ப்படியாமையால் பாதிக்கப்படும் உன்னுடைய சமூகத்தில் உள்ள அனைவருக்கும் மனந்திரும்புதல் மற்றும் ஆவிக்குரிய புதுப்பித்தலுக்காக ஜெபி. அவர்கள் கர்த்தரின் கருணையையும் மன்னிப்பையும் அடைய வேண்டும்.

 

சுய பரிசோதனை:

  1. என் வாழ்க்கையில் விக்கிரக வழிபாடு அல்லது கீழ்ப்படியாமையின் பகுதிகளைக் குறித்து நான் கர்த்தரிடம் ஒப்புக்கொள்ள வேண்டுமா?
  2. எனது செயல்களின் விளைவுகளை நான் உணர்ந்து, கர்த்தரின் மன்னிப்பு மற்றும் தலையீட்டை நாடியிருக்கிறேனா?
  3. பாவமான நடத்தைகளிலிருந்து நான் எவ்வாறு விலகி, கர்த்தரின் விருப்பத்துடன் என் வாழ்க்கையை இன்னும் நெருக்கமாக சீரமைக்க முடியும்?

Comments